மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களிடம் நபார்டு வங்கி மூலமாக விவசாய கடன் மானியத்துடன் பெற்றுத்தருவதாக கருணாமூர்த்தி கூறி உள்ளார். இதை நம்பிய சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி விவசாய கடன் பெறுவதற்காக 12 பவுன் நகையை கருணாமூர்த்தியிடம் கொடுத்தார்
அவரும் நபார்டு வங்கியில் இருந்து கடன் வாங்கி விட்டதாக சசிகலாவிடம் கூறினார். மேலும், தனக்கு அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதனால் சசிகலா கடனாக பெற்ற ரூ.9 லட்சத்தை கருணாமூர்த்தியிடமே ஒப்படைத்துள்ளார்.
நீண்ட நாட்களாகியும் கருணாமூர்த்தி வட்டியும், அசலும் கொடுக்கவில்லை. இதனால் அந்தியூர் போலீசில் சசிகலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருணாமூர்த்தி மானியத்தில் கடன் வாங்கி கொடுப்பதாக பல பெண்களை ஏமாற்றி நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட் டதும், வங்கிகள், நிதி நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்துவிட்டு வங்கியில் மானியத்தில் கடன் பெற்றதாக பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்தது.
30-க்கும் மேற்பட்டவர்களிடம் 217 பவுன் நகை மற்றும் ரூ.89 லட்சத்தை கருணாமூர்த்தி மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதனிடையே இந்த வழக்கை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கருணாமூர்த்தியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வங்கிகள், நிதி நிறுவ னங்களில் நகைகளை அடமானம் வைத்ததற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கைதான கருணாமூர்த்தி ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
0 coment rios: