புதன், 18 டிசம்பர், 2024

ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 வடமாநில வாலிபர்கள் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார் 2 வடமாநில வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ரயில் நிலையம் அருகே ஹெராயின் கடத்தப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு உதவி காவல் ஆய்வாளர் துளசிமணி தலைமையிலான போலீசார் ரயில் நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும் படியாக 2 வடமாநில வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹாசானு ஜமால் (வயது 32), ஹசாதுல் இஸ்லாம் (வயது 29) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த பாக்சை திறந்து பார்த்தபோது அதில் 50 கிராம் ஹெராயின் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, போலீசார் அவர்களை இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 50 கிராம் ஹெரயின் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து ஹெராயினை கடத்தி வந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கடத்தி செல்ல முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: