சனி, 7 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.9) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம், மேட்டுக்கடை, முத்தாம்பாளையம் வீட்டு வசதி வாரியம் மற்றும் அத்தாணி துணை மின் நிலையங்களில் நாளை (டிச.9) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல் பாளை யம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், மரவ பாளையம். சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் மற்றும் சேவாக்கவுண்டனூர்.

ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை துணை மின் நிலையம்:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஈரோடு மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம்நகர், வீரப்பம்பாளையம், நஞ்ச னாபுரம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி நால்ரோடு, மூலக்கரை, கேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன் பாளையம். எம்.ஜி.ஆர்.நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர்-ஈரோடுரோடு, தொட்டிபா ளையம், சிந்தன்குட்டை, அணைக்கட்டு, ரயில்நகர், அம்பிகைநகர் மற்றும் ஜீவாநகர்.

ஈரோடு முத்தாம்பாளையம் வீட்டு வசதி வாரியம் - 1, 4, 5, 6, 7, 8 துணை மின் நிலையம்:-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அன்னை நகர், பாலாஜி கார்டன், நல்லியம்பாளையம், பாலாஜி ஆர்கேட், சுத்தானந்தா ஆர்ச், லட்சுமி நகர், ஓடைமேடு, தெற்குபள்ளம், ஸ்ரீகார்டன், சிவன் நகர், டீ.ஆர்.கார்டன், லட்சுமி கார்டன் மற்றும் சரவணா நகர்.

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி துணை மின் நிலையம்:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அத்தாணி டவுன், கைகாட்டி பிரிவு, தம்பங்கரடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பம்பாளையம், அத்தாணி, பெரும்பள்ளம், குண்டு மூப்பனூர், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கன்பாளையம், கேத்தநாயக்கன்பாளையம், டி.ஆர்.காலனி, இந்திரா நகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், பெருமாள்கோவில் புதூர், குப்பாண்டம்பாளையம் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: