S.K. சுரேஷ்பாபு.
மறைந்த திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்.
தமிழகத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பின்னர் குணச்சித்திர வேடம் காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சில்க் ஸ்மிதா என்றால் அது மிகையாகாது. திரையுலகில் நன்கு வளர்ந்து வந்த காலகட்டத்தில் திடீரென அவர் உயிரிழந்தார். இது தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாகவே இருந்தது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கோட்டையில் சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர்கள் ஒன்றிணைந்து நடிகை சில்க் ஸ்மிதா அவர்களின் தீவிர ரசிகர்கள் அவரது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நடிகை சில்க் ஸ்மிதா ரசிகர் மன்ற தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செயலாளர் சுரேஷ் பொருளாளர் சக்தி மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு உச்சகமாக கொண்டாடி மகிழ்ந்ததோடு ஒருவருக்கு ஒருவர் கேக்குகளை ஊட்டி மகிழ்ந்தனர்.
0 coment rios: