ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் பனிமூட்டம்... குளிர் பிரதேசங்களைப் போல குளிருடன் பனிமூட்டமாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி
பனிப்பொழிவு காரணமாக சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி மெதுவாக செல்கின்றனர். நேற்று நள்ளிரவு ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ததது. இந்தநிலையில், அதிகாலை முதல் ஈரோடு மாநகரின் சுற்றுவட்டார பகுதிகளான சோலார், கொல்லம்பாளையம், மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது .
அதேபோல் ஈரோடு மாநகரத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் நிலவி வருகின்றது. அதேசமயம், ஊட்டி கொடைக்கானலை போல குளிரும் சற்று அதிகமாகவே இருப்பதால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 coment rios: