புதன், 4 டிசம்பர், 2024

தனது மகன் தனுஷ் ராஜ் என்பவரை தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதோடு தன்னை பேசவிடாமல் தடுக்கும் பிரேமலதா மற்றும் சந்திரன் ஆகியோரிடம் இருந்து தனது மகனை மீட்டு தர வேண்டும். இளைஞரின் பெற்றோர் தமிழ்ச்செல்வி மற்றும் ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களுடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தனது மகன் தனுஷ் ராஜ் என்பவரை தாக்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதோடு தன்னை பேசவிடாமல் தடுக்கும் பிரேமலதா மற்றும் சந்திரன் ஆகியோரிடம் இருந்து தனது மகனை மீட்டு தர வேண்டும். இளைஞரின் பெற்றோர் தமிழ்ச்செல்வி மற்றும் ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களுடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எம்பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசேகரின் தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்கள் தனது உற்றார் உறவினர்கள் திரளானவர்களுடன் புகார் அளிப்பதற்காக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்திருந்தனர். அந்த புகார் மனுவில் இவர்களது மூத்த மகன் தனுஷ்ராஜ். இவரை அதே பகுதியைச் சேர்ந்த பிரேமலதா மற்றும் அவரது கணவர் தூண்டுதலின் பேரில், அதே போரை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர் என்று பிரேமலதா மற்றும் அவரது கணவர் சந்திரன் மற்றும் அவரது தம்பி சேட்டு ஆகியவர் சேர்ந்து பொய்யான புகார் செய்வதற்காக தனது மகன் தனுசுராஜை இவர்களே அடித்து அவனை காயப்படுத்தி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்றும் தகவல் அறிந்து தங்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தங்களது மகனை பார்க்க சென்றபோது கூட அவனிடம் பேச விடாமல் பிரேமலதாவும் அவரது கணவரும் தங்களை தடுத்து வருகின்றனர் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் தனது மகன் தங்களுக்கு வேண்டும் இது சம்பந்தமாக கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட பிரேமலதா மற்றும் அவரது கணவர் சந்திரன் ஆகியோர் மீது எடுக்கப்படவில்லை என்றும் எனவே சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தனது மகனை அவர்களிடமிருந்து காப்பாற்றி என்னுடன் ஒப்படைக்க வேண்டிய தனது மகனை கடத்தி வைத்து துன்புறுத்தியுள்ள பிரேமலதா, சந்திரன் மற்றும் சேட்டு ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 
இதே போல சம்பந்தப்பட்ட பிரேமலதா, சந்திரன் மற்றும் சேட்டு ஆகியோர் மீது எம் பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கடந்த 28ஆம் தேதி சேலம் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், தங்களது பகுதியைச் சேர்ந்த பிரேமலதா, சந்திரன் மற்றும் சேட்டு ஆகியோர் தங்களது ஊரில் உள்ள இளைஞர்களை சீரழிக்கும் வகையில் கஞ்சா விநியோகம் செய்து வருகிறார்கள் என்றும் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா பிடிப்பதை கண்டு எங்கள் ஊரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து தவறான பாதையில் செல்லும்  இளைஞர்களை தடுத்து நிறுத்தும் வகையில் சில வேலைகளை செய்ததால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட மூன்று பேர் சேர்ந்து வெளியூரைச் சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து எங்கள் ஊரில் உள்ள முத்து என்பவரை தாக்கி விட்டு அந்த ரவுடிகளிடம் கடுமையான இரும்பு ஆயுதம் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு இருந்த அவர்கள் கடுமையான தகாத வார்த்தைகளை திட்டியதோடு மட்டுமல்லாமல் எங்கள் ஊருக்குள் வந்தார்கள். ஊரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அந்த வெளியூர் ரவுடிகளை விரட்டி அடித்ததாகவும் இது சம்பந்தமாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் நல்ல முறையில் படித்து வளர வேண்டும் என்பதற்காக கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்தி எங்களை காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர்கள் சம்பந்தப்பட்ட மூவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 
அதுமட்டுமல்லாமல் அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அங்கு படித்த இளைஞர்களின் தடை முடிகளை வெட்டி அவமானப்படுத்தியதோடு அவர்களை தாக்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டிற்கு திட்டவட்டமாக மறுத்த தனுஷின் தாயார், தங்களது அனுமதி யோடு மட்டுமே அவர்கள் தனது மகனின் தலை முடியை வெட்டினார்கள் என்றும் குறிப்பிட்டார். இதன் காரணமாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: