வியாழன், 19 டிசம்பர், 2024

ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு மாவட்டம் சோலாரில் நாளை (டிச.20) வெள்ளிக்கிழமை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) வியாழக்கிழமை மதியம் ஈரோடு வந்தார்.
முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோரும் வரவேற்றனர்.

இதையடுத்து, சாலை வழியாக காரில் புறப்பட்ட முதல்வருக்கு ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், எம்பிக்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, பெருந்துறை வந்த முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர். முதல்வர் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இவ்வாறாக, 20 இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நஞ்சனாபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். பின்னர், இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: