சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தொடர் தடையின் காரணமாக களம் காண முடியாமல் கூண்டுகளில் அடைபட்டுள்ள சண்டை கோழிகள் : சண்டை கோழிகள் அழியும் தருவாயில் மனநலம் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வேதனையில் இருக்கும் சண்டை சேவல்களை வளர்க்கும் உரிமையாளர்கள் : தை திருநாளிற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை போல வெத்துக்கால் சேவல் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் : தமிழக முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசுக்கு சண்டை கோழி வளர்ப்போர் கோரிக்கை.....
இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு......
தித்திக்கும் கரும்பும், பரபரப்பூட்டும் ஜல்லிக்கட்டும் தான் பொங்கலின் அடையாளங்கள் என்று யாரும் தப்புகணக்கு போட்டுவிடாதீர்கள். வேறு சில வீர விளையாட்டுக்களும் தமிழர்களின் அடையாளம் தான். அவ்வாறான விளையாட்டுக்களில் ஒன்றுதான் சண்டை கோழிகளின் மோதல்களும். திமிரிவரும் காளைகளை அடக்குவது போலவே பரபரப்பும் மயிர்க்கூச்செரியும் திருப்பங்களும் உள்ளடக்கிய வீர விளையாட்டுதான் இதுவும். மன்னர்கள் காலத்திலேயே சண்டை கோழிகளை மோதவிடும் விளையாட்டு போட்டிகள் இருந்ததாகவும், இருப்பினும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் முதல் நாட்டின் பிற பகுதிகளிலும் சண்டை கோழி போட்டிகள் பிரபலம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த போட்டிகள் தமிழகத்தில் சேலம்,புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, பட்டுக்கோட்டை, வாடிப்பட்டி, சோழவந்தான், நாகர்கோயில் மற்றும் வேலூர் R.K. பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் இந்த போட்டி குறிப்பாக தமிழர் திருநாளாம் தைத்திருநாளன்று நடத்தபட்ட இந்த போட்டி ஒருகட்டத்தில் சண்டை கோழி போட்டி சூதாட்டமாக மாறிவிட்டதாக கூறி கடந்த 2009ம் ஆண்டுடன் தடைவிதிக்கப்பட்டது.
இதனால் சண்டை கோழிகளை வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்ட தடை குறித்தும், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறும்போது கத்திக்கட்டு சேவல் போட்டி மற்றும் வெற்றுக்கால் சேவல் போட்டியென்று சண்டை கோழி போட்டிகள் என்பது இரண்டு வகை என்றும் இதில் வெற்றுக்கால் சேவல் போட்டி என்பது குத்துச்சண்டை போன்றது என்றார்.