சனி, 11 ஜனவரி, 2025

தொடர் தடையின் காரணமாக களம் காண முடியாமல் கூண்டுகளில் அடைபட்டுள்ள சண்டை கோழிகள் : சண்டை கோழிகள் அழியும் தருவாயில் மனநலம் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வேதனையில் இருக்கும் சண்டை சேவல்களை வளர்க்கும் உரிமையாளர்கள் : தை திருநாளிற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை போல வெத்துக்கால் சேவல் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் : தமிழக முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசுக்கு சண்டை கோழி வளர்ப்போர் கோரிக்கை.....

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தொடர் தடையின் காரணமாக களம் காண முடியாமல் கூண்டுகளில் அடைபட்டுள்ள சண்டை கோழிகள் : சண்டை கோழிகள் அழியும் தருவாயில் மனநலம் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வேதனையில் இருக்கும் சண்டை சேவல்களை வளர்க்கும் உரிமையாளர்கள் : தை திருநாளிற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை போல வெத்துக்கால் சேவல் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் : தமிழக முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசுக்கு சண்டை கோழி வளர்ப்போர் கோரிக்கை.....
இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு......
 
தித்திக்கும் கரும்பும், பரபரப்பூட்டும் ஜல்லிக்கட்டும் தான் பொங்கலின் அடையாளங்கள் என்று யாரும் தப்புகணக்கு போட்டுவிடாதீர்கள். வேறு சில வீர விளையாட்டுக்களும் தமிழர்களின் அடையாளம் தான். அவ்வாறான விளையாட்டுக்களில் ஒன்றுதான் சண்டை கோழிகளின் மோதல்களும். திமிரிவரும் காளைகளை அடக்குவது போலவே பரபரப்பும் மயிர்க்கூச்செரியும் திருப்பங்களும் உள்ளடக்கிய வீர விளையாட்டுதான் இதுவும். மன்னர்கள் காலத்திலேயே சண்டை கோழிகளை மோதவிடும் விளையாட்டு போட்டிகள் இருந்ததாகவும், இருப்பினும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் முதல் நாட்டின் பிற பகுதிகளிலும் சண்டை கோழி போட்டிகள் பிரபலம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த போட்டிகள் தமிழகத்தில் சேலம்,புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை, பட்டுக்கோட்டை, வாடிப்பட்டி, சோழவந்தான், நாகர்கோயில் மற்றும் வேலூர் R.K. பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் இந்த போட்டி குறிப்பாக தமிழர் திருநாளாம் தைத்திருநாளன்று நடத்தபட்ட இந்த போட்டி ஒருகட்டத்தில் சண்டை கோழி போட்டி சூதாட்டமாக மாறிவிட்டதாக கூறி கடந்த 2009ம் ஆண்டுடன் தடைவிதிக்கப்பட்டது. 
இதனால் சண்டை கோழிகளை வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்ட தடை குறித்தும், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறும்போது கத்திக்கட்டு சேவல் போட்டி மற்றும் வெற்றுக்கால் சேவல் போட்டியென்று  சண்டை கோழி போட்டிகள் என்பது இரண்டு வகை என்றும் இதில் வெற்றுக்கால் சேவல் போட்டி என்பது குத்துச்சண்டை போன்றது என்றார்.
தடைவிதிக்கும் அளவிற்கு சேவல் சண்டை போட்டியில் ஒன்றுமே இல்லை என்றும் இதுபோன்று விதிக்கப்பட்ட தடையால் தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் அனைத்தும் அழியும் சூழலுக்கு சென்று விட்டதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கியது மகிழ்ச்சி என்றாலும், அனைத்து வீர விளையாட்டுக்களையும் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசு உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தை திருநாளிற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதாதால் தமிழக அரசு விரைவில் அனுமது அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டுள்ள தடையால் சண்டை கோழி வளர்பவர்கள் மனநலம் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையேயே இருப்பதாகவும்  தமிழக முதலமைச்சர்  அவர்களுக்கு சேவ கோழி சண்டை என்ன என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்பதால் நடப்பாண்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கோபாலகிருஷ்ணன்.
சண்டை கோழிகளை தங்களது பிள்ளைகளாக பாவித்து வரும் தங்களை போன்றவர்களிடம் எந்தவிதமான கருத்தும் கேட்காமல் தடவிதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட சேவல்கள் அழிந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் இதனால் நல்ல மரபணு மாற்ற பரிமாற்றம் தடைபடுவதாகவும், தற்போது சண்டை கோழிகளை வீரம் சார்ந்த கலைபொருளாக கருத முடியவில்லை என்றும் என்றாலும் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சண்டை சேவல்களை வளர்த்து வருவதாகவும் எனவே நடப்பாண்டாவது போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சண்டைக்கோழி வளர்ப்பாளர் தினேஷ்.
சேவல் சண்டை என்பதை தொலைக்காட்சிகளில் மட்டுமே காண முடிவதாக கூறும் இளைஞர்கள் கடந்த சில வருடங்களாக சேவல் சண்டை சேலத்தில் நடைபெறாததால் தைதிருநாளன்று தங்களுக்கான பொழுது போக்கே இல்லாமல் செல்வதாகவும் இதனால் இந்த போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கடும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் தமிழ்ச்செல்வன் என்கின்ற சண்டை சேவல் வளர்ப்பு..
 சண்டை கோழி போட்டியை கடந்த 16  ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பார்த்ததாகவும், அதனை தொடர்ந்து, ஆடுகளம் திரைப்படத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத்தில் மட்டுமே கண்டதாகவும், சேவல் சண்டை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாகவும்,  அதனால் தடை நீக்கி அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் அவர்கள்  ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் எப்படி கலைக்கட்டும் என்பது அவருக்கும் தெரியும் என்பதால் தங்களது கோரிக்கையை பரிசீலித்து, சில பல நிபந்தனைகளுடன் நடப்பாண்டு ஆவது போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதும் சண்டை கோழி வளர்ப்போர் களின் கூடுதல் கோரிக்கையாக உள்ளது.
மனிதர்களிடம் இல்லாத ஒருமேலான குணம் சண்டைக்கோழிகளிடம் உள்ளன. ஆம்.....அவைகள் எதிரிகளை ஒருபோதும் முதுகில் தாக்குவதில்லை, நேருக்கு நேராக மோதியே எதிரியை வீழ்த்துகிறது. இத்தனை சிறப்பு மிக்க தமிழர்களின் வீர விளையாட்டுக்களின் ஒன்றான, சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி இந்த ஆண்டு தைத்திருநாளன்று சண்டை கோழிகளை களம் ஆட விட வேண்டும் என்பது மட்டுமே தமிழர்கள் மற்றும் வீர விளையாட்டு கழகத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 
SABA NEWS THAMIL இணைய செய்திகளுக்காக சேலத்தில் இருந்து S.K. சுரேஷ்பாபு.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: