ஈரோட்டில் நடைபெற்ற
மாநில அளவிலான கராத்தே போட்டியில் 300-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தறமைகளை வெளிபடுத்தி அபார சாதனை படைத்தனர்.
ஈரோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலியில், கோஜோரியோ கராத்தே சம்மேளனத்தின் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
கோஜோரியோ கராத்தே சம்மேளனத்தின் மாநில தலைவர் பார்த்திபன் கூறுகையில், கஜோரியோ கராத்தே பெடரேஷன் சார்பில் ஈரோடு டெக்ஸ் வேலியில் இரண்டாவது மாநில அளவிலான கஜோரியோ கராத்தே போட்டிகள் நடைபெற்றது,
இதில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் வீராங்கனைகள் அடுத்த மாதம் கோவை மாவட்டத்தில் நடைபெறுகின்ற தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள், இன்று நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகளுக்கான போட்டிகளில் 8, 9 வயதிலும், சிறுவர் சிறுமிகளுக்கான 10, 11 வயது உட்பட கேடர், ஜூனியர் கேடர், அண்டர் 21, என்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், தனிநபராக செய்யக்கூடிய கத்தா பிரிவிலும், வயது மற்றும் எடை அடிப்படையிலும் கத்தார் மற்றும் கும்தே என 88 பிரிவுகளில் நடைபெற்றது, இதில் கத்தா 60 பிரிவுகளிலும், கும்தே 28 பிரிவுகளிலும், மூன்று பேர் கொண்ட குழு போட்டி என நடத்தப்பட்டன,
முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற கராத்தே வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, இந்த பரிசுகளை பெற்ற வீரர் வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார், இந்த தேசிய போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இலங்கையில் நடைபெறும் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்,
இன்று நடைபெற்ற மாநில அளவிலான இந்த கராத்தே போட்டியில் சென்னை கோவை திருப்பூர், சிவகங்கை, மதுரை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர் என தெரிவித்தார்,
இப்போட்டிகளை தற்காப்பு கலை கராத்தே மாஸ்டர்களான மாணிக்கவாசகம், சக்தி, மணிவர்மா, பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.
0 coment rios: