இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். பரமேஸ்வரன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். சரஸ்வதி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது , அதிகாலை 3.30 மணியளவில் சரஸ்வதி வீட்டிற்குள் நுழைந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சரஸ்வதி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றார்.
பின்னர் அந்த நபர் திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலிக்கொடியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், திடுக்கிட்டு எழுந்த சரஸ்வதி திருடன், திருடன் என கத்தினார். அவரது சத்தம் கேட்டு விழித்த பரமேஸ்வரன் திருடனை பிடிக்க ஓடினார். ஆனால் அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: