சனி, 1 பிப்ரவரி, 2025

ஈரோட்டில் திமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பினர் தீவிர பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமாருக்கு ஆதரவு கேட்டு அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பின் சார்பில், அருந்ததியர் காலணிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமாருக்கு ஆதரவு கேட்டு, சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் தலைமையில், ஈரோடு ராஜ்யசபா எம்பி அந்தியூர் பா செல்வராஜ் உட்பட அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு சார்ந்த பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட ஆலமர தெரு, ஓடைப்பள்ளம், குயவன் திட்டு, முனிசிபல் சத்திரம் உள்ளிட்ட அருந்ததியர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்,

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: