நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி அளவில் சேலம் ரயில் நிலையத்துக்கும், ஈரோடு ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அப்போது நவீதம் சிங், அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டவே, உடனே நவீதம் சிங் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இதுகுறித்து ஈரோடு ரயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து நவீதம் சிங்கை தேடி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த நவீதம் சிங்கை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
0 coment rios: