ஞாயிறு, 23 மார்ச், 2025

சேலத்தில் இ சேவை மையம் உரிமையாளர்களுக்கு, சேலம் மாவட்ட காவல் துறை சைபர் கிரைம் பிரிவு காவல்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் இ சேவை மையம் உரிமையாளர்களுக்கு, சேலம் மாவட்ட காவல் துறை சைபர் கிரைம் பிரிவு காவல்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம். 

தமிழ்நாடு இ சேவை மைய உரிமையாளர்களுக்கான பயிற்சி முகாம் சேலம் மாநகர காவல் துறை சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சங்கத்தின் நிர்வாகிகள் மூர்த்தி சேவியர் சரவணகுமார் அருள் செல்வம் நாகராஜன் ஒலி டவுன் முன்னிலை வகித்த இந்த சிறப்பு முகாமில், சங்கம் செய்த சாதனைகள் சங்கத்தின் மூலம் பொதுமக்கள் பெற்ற பலன்கள் நலன்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து பட்டியலிடப்பட்டது. 
இந்த பயிற்சி முகாமில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு சார்பாக ஏ டி எஸ் பி பாலகுமார் மற்றும் ஆய்வாளர் ஹேமாவதி ஆகியோரின் அறிவுரைப்படி உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமை காவலர்கள் கார்த்திக் ராஜா மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு லோன் செயலிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று அறிந்த பிறகு பணம் பெறுவதோ செலுத்துவதோ முயற்சிக்க வேண்டும் என்றும் கிரிப்டோ காயங்களில் பணம் மூலதனம் செய்வதற்கு முன்பு பலவாரி யோசித்த பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்றும் whatsapp களில் வரும் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்து தங்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழந்து விடாமல் இருக்க எந்த ஒரு லிங்கையும் ஓபன் செய்ய கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். 
மேலும் இ சேவை மையங்களில் பணம் செலுத்த மற்றும் பணம் பெற வருபவர்களின் முழு விவரங்களை பதிவேடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய சைபர் கிரைம் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் கியூ ஆர் கோடு சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தங்களுக்கு வரவேண்டிய பணம் வேறு ஒருவரது வங்கிக் கணக்கிற்கு சென்று விடும் என்பது போன்ற பல்வேறு ஆன்லைன் மோசடிகள் குறித்து இ சேவை மைய உரிமையாளர்களான தங்களுக்கும் தங்களையே நம்பி வந்து சேவையை பெறும் பொதுமக்களுக்கான அறிவுரைகளை வழங்கினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: