ஞாயிறு, 30 மார்ச், 2025

தொகுதி மறு சீரமைப்பை மோடியும் அமிர்தாவும் ரகசியமாக செயல்படுத்த திட்டம். சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் குற்றச்சாட்டு.

சேலம். 
S.K. சுரேஷ் பபு..

தொகுதி மறு சீரமைப்பை மோடியும் அமிர்தாவும் ரகசியமாக செயல்படுத்த திட்டம். சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் குற்றச்சாட்டு.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தத் தொகுதி மறு வரையினால் தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணிசமாக குறைந்து மக்கள் பிரதிநிதித்துவம் குறையும். இது தமிழக மக்கள் மீது நேரடியான தாக்குதல். இதனை ஒத்தி வைக்க கேட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் தொகுதி வரையறை தொடர்பாக தமிழக முதலமைச்சர் கூட்டு நடவடிக்கை குழு அமைத்து சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் 54 கட்சிகள் மூன்று மாநில முதலமைச்சர்கள் பல மாநில தலைவர்களும் பங்கேற்றனர். குடும்பக்கட்டுப்பாட்டால் தமிழக முற்பட பெண் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் பீகார் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வரிப்பதிவு அதிக அளவில் உள்ளது. வடமாநிலங்களுக்கு வரிப்பதிவு அதிக அளவில் பகிர்ந்துள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு மிக குறைந்த அளவு வரி பகிர்வு அளிக்கப்படுகிறது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். வட மாநிலங்களில் 10 மாநிலங்களில் வெற்றி பெற்றால் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் மற்ற மாநிலங்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழக மக்களுக்கு பாதிப்பு. மோடி மற்றும் அமித்ஷா இருவரும் இது குறித்து மௌனமாக உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் மற்றும் வட மாநில தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 4000 கோடிக்கு மேல் நிதி வழங்காமல் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் நேற்று தமிழக முழுவதும் ஒன்றியத்திற்கு இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் நிர்வாக திறமையால் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை அமையும் என நம்பிக்கை தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன், ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கூறிய கூற்றின்படி அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்றும் தமிழகத்தில் திமுகவுக்கும் அதிமுகவிற்கும் மத்தியே போட்டி என்றும் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: