சனி, 29 மார்ச், 2025

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

இதுதொடர்பாக ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற ஏப்ரல் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா மற்றும் 14ம் தேதி மறுபூஜை விழாவும் நடக்கிறது .

இதை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தி, புளியம்பட்டி, மைசூர், நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: