சனி, 15 மார்ச், 2025

கோபி பகுதியில் செங்கோட்டையன் எம்எல்ஏவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தனியார் இணைய விழாவில் பங்கேற்க கூடாது என ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் செங்கோட்டையன் எம்எல்ஏவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நம்பியூர் பகுதியில் செங்கோட்டையனுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் திராவிடர் இயக்கத்தால் 50 ஆண்டுகள் பதவியும் பலனும் பெற்று இனப்பகைவர்களுடன் கூட்டணி அமைக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என மனிதம் சட்ட உதவி மையம் மற்றும் தொகுதி மக்கள் சார்பில் அன்புடன் கோருவதாக போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: