சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகர் மாவட்டம் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று காலை இரும்பாலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ சிறப்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேலம் மாநாட்டு குழு பொறுப்பாளர் கே.எல். இளவழகன் Ex, MLA. பேசும் போது :-
சென்னை மாமல்லபுரத்தில் மே மாதம் 11-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு சேலம் மாநகர் மாவட்டத்தில் ஆயிரம் வாகனங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி,பசுமை தாயகம மாநில இணைச் செயலாளர் சத்திரியசேகர், மாவட்ட அமைப்பு தலைவர் வக்கீல் குமார், அமைப்பு செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் கவிதா. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி.ஆறுமுகம்,வன்னியர் சங்க செயலாளர் ஆர்.கே.சிவா. மாவட்ட துணைச் செயலாளர்கள் , ராஜமாணிக்கம், தங்கராஜ், சேகர், கோவிந்தராஜ், கலை, கோவிந்தன், ஜெ.சுமன்,பூமாலை சஙகர்,பகுதி செயலாளர் ஈஸ்வரன், சிவா, ஏ.கே நடராஜன், திரிசங்கு, ராஜா, சமயவேல் அண்ணாமலை, சண்முகம்,சின்னச்சாமி ஒன்றிய செயலாளர்கள் கணேசன் காமராஜ் அருள்மணி, இளங்கோ, மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணம்மாள், இளம்பெண்கள் அணி தலைவர் தங்கம் அன்புமணி தம்பிகள் படை செயலாளர் இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: