வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் விடுவிப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பான நியமனங்களில் யுஜிசி தலைவர்களை சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துவதாக கூறிதமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளான பர்திவாலா ,மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. அதில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. பொதுவாக சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் அனுமதி வழங்கலாம் இல்லையென்றால் அதனை நிறுத்தி வைக்கலாம்.
மேலும் அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும்நிறுத்தி வைக்கும் மசோதா செல்லாது என்று கூறும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. குறிப்பாக சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடாது என்பது தான் விதி. ஆளுநருக்கு என தன்னிச்சையான அதிகாரம் ஏதும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனை வரவேற்கும் விதமாக ஈரோடு திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாநில இணை செயலாளர் வழக்கறிஞர் கண்ணன், மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமார் தலைமையில், ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சம்பத் நகர் சாலையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
0 coment rios: