சாதனை படைத்துவிட்டு ஈரோடு திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி கோவா மாநிலம் மட்கோன் பகுதியில் கடந்த 25-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 15 மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் தமிழகத்தின் சார்பில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வென்றனர்.
அதன்படி 14 வயதுக்குட்பட்ட ஏரோ குழு போட்டியில் யோகவர்ஷினி, ஸ்ரீயா, தாரணி, இனியா, யத்விக், ஐஸ்வர்யா, பிரஜித் ஸ்ரீமன், ஜேஷ்னா, கனிஷ்கா, ஹர்சிதா ஆகியோர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.
11 வயதுக்குட்பட்ட டிரியோ போட்டியில் யோகவர்ஷினி, ஐஸ்வர்யா, ஜெஷினா ஆகியோரும், 17 வயதுக்குபட்ட பிரிவில் தாரணி, கனிஷ்கா, ஹர்சிதா ஆகியோரும் 2-வது இடத்தை பிடித்தனர். தனிநபர் ஏரோபிக்ஸ் போட்டியில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் இனியாவும், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் யாத்விக்கும் 2-வது இடத்தை பிடித்தனர்.
தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மூசாவுக்கும் ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், செலபிரடெக்ஸ் ஈவன்ட்ஸ் முதன்மை செயல் அதிகாரி அப்துல் முனாசிர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார்.
0 coment rios: