வக்ஃப் திருத்த சட்டத்தை நிராகரிப்போம், வக்ஃப் திருத்த சட்டத்தை
ஏற்க மாட்டோம், பள்ளிவாசல், மாதரஸா, கபர்ஸ்தானை விட்டுத்தரமாட்டோம் என்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாராளுமன்றத்தில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்ததை கண்டித்தும் ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் எஸ்.அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அ.சாகுல் ஹமீது வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் க.முனாப், பொருளாளர் எச்.முகமது ஜாபீர், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.முகமது மன்சூர் எம்.முகமது ஹசன் அலி, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் எம்.சபீர் அஹமது, செயலாளர் ப.முகமது பர்மானுல்லா, பவானி தொகுதி தலைவர் ஜே.ஜாஹிர் உசேன், செயலாளர் நிஹார் (எ) எஸ்.ஜன்னத்துல் பிர்தௌஸ் உள்ளிட்ட தொகுதி, வார்டு நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 coment rios: