சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்தல் தமிழக ஆளுநர், பொன்முடியின் அமைச்சர் பதவியை ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் பெரியசாமி தகவல்.
இந்து மக்கள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் பெரியசாமி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில் திமுக பிரமுகர்களின் இந்து விரோத ஆபாச பேச்சுக்கள் பெரும்பான்மை இந்து மக்களின் மத ஆன்மீக உணர்வுகளை காயப்படுத்தி வருகிறது. அமைச்சர் பொன்முடி ஆபாச பேச்சு கனிமொழியே கண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது. சைவம் வைணவம் திருநீறு திருநாமம் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை அவமானப்படுத்தும் உள்நோக்கத்துடன் இதை திராவிடர் கழக மேடையில் பொன்முடி பேசி உள்ளார். பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கத்தக்க வகையில் பொன்முடி பேசியதற்காக அவருடைய கட்சி பதவி மற்றும் பறிக்கப்பட்டுள்ளது. இதுபோல திமுக மாணவர் அணியின் மதியில் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா திமுக மாணவர் அணி பொறுப்பாளர்கள் கரைவேட்டி கட்டும்போது குங்குமம் திருநீறு சந்தனம் வைத்துக் கொள்ளக் கூடாது அது சங்கிகளின் அடையாளம் என்றும் பேசி உள்ளார். அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அவருடைய சொந்த கருத்து என மழுப்பலாக பதில் அளித்தார். இதுவரை ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் உதயநிதி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பங்கேற்ற திமுக பேச்சாளர் பயிற்சி வகுப்பு இளைஞரணி கூட்டத்தில் அசுரகீதம் எனும் கலை நிகழ்ச்சி மூலம் இந்து சமயம் குறித்தும் பிராமண சமூக மக்களை குறிவைத்தும் மிகத் தரக்குறைவான நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதனை உதயநிதி உள்ளிட்டோர் கைதட்டி ரசித்து தங்களுடைய ஹிந்து சமய வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தற்பொழுது திராவிடர் கழகமாக மாறி உள்ளது. இந்து சமய நம்பிக்கைகளை பழக்க வழக்கங்களை குறிவைத்து இழிவு படுத்துவது தொடர்கிறது. தற்பொழுது பொன்முடி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கண்துடைப்பு ஆகும் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரது எம்எல்ஏ பதவியும் பறிக்க வேண்டும். திமுகவின் அடிப்படையில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இத்தகைய ஆபாசமான அருவருக்கத்தக்க பேஜை பேசியதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஆகியோர்களது வாயிலாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இந்த மனுவை இந்து மக்கள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் பெரியசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் தமிழக அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்த தமிழக ஆளுநர் அவரது பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்படும் என்றும் என்றும் தெரிவித்தார்.
0 coment rios: