ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் விஜயபாஸ்கர். இவர் அலுவலகத்துக்கு சரிவர வருவதில்லை. எப்போதும் நில அளவை செய்ய சென்று விடுவது உள்பட பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் அவரை கண்டித்து வருகிற 5ம் தேதி கடம்பூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என குத்தியாலத்தூர் பொதுமக்கள் சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி கோபி சார் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் விஜயபாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
0 coment rios: