வக்பு வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஈரோட்டில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர்.
மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் உட்பட இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சேவாதளம் மாவட்டத் தலைவர் முகமது யூசுப் தலைமையில், கவுன்சிலர் ஈபி ரவி, மாவட்ட தலைவர் திருச்செல்வம், ராஜேஷ் ராஜப்பா, முகமது அர்ஷத், பாட்ஷா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த கடிதத்தில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரியும், இஸ்லாமிய முன்னோர்கள் இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கொடுக்கப்பட்ட நிலங்களை புதிய வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் காரணமாக இழக்க நேரிடும் இதனால் மதசார்ப்பின்மை, மத நல்லிணக்கம் கெடும் நிலை உருவாகும் இதனால் அரசியல் சட்டத்திற்கு எதிராக திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்தை கைவிட்டு மத்திய அரசு பழைய வக்பு வாரிய சட்டங்கள் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டு அனுப்பட்டது...
0 coment rios: