10ம் வகுப்பு பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) முடிவுகள் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால் இன்று (மே.16) வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 11வது இடத்தை பிடித்து உள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15 தேதி வரை நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 12,085 மாணவர்கள், 12,065 மாணவிகள் என மொத்தம் 24,146 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 11,412 மாணவர்கள், 11,769 மாணவிகள் என மொத்தம் 23,181 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0 coment rios: