புதன், 7 மே, 2025

ஈரோடு மாவட்டத்தில் வரும் மே.10ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் மே.10 தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் மே மாதம் 10ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசிஎண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

அதன்படி, ஈரோடு வட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடம், காளிங்கராயன்பாளையம் -3, மேட்டுநாசுவம்பாளையம் கிராமம் ரேஷன் கடையிலும், பெருந்துறை வட்டத்தில் வாய்ப்பாடி ரேஷன் கடையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் நஞ்சைக்காளமங்கலம் ரேஷன் கடையிலும் நடக்க உள்ளது.

அதேபோல், கொடுமுடி வட்டத்தில் கோட்டைகாட்டுவலசு, கொந்தளம் கிராமம் ரேஷன் கடையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் குள்ளநாயக்கனூர், பெரிய கொடிவேரி கிராமம் ரேஷன் கடையிலும், நம்பியூர் வட்டத்தில் கூடக்கரை ரேஷன் கடையிலும் நடைபெற உள்ளது.

மேலும், பவானி வட்டத்தில் பெரியபுலியூர் ரேஷன் கடையிலும், அந்தியூர் வட்டத்தில் பர்கூர் ரேஷன் கடையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் கராச்சிகோரை, புங்கார் கிராமம் ரேஷன் கடையிலும், தாளவாடி வட்டத்தில் கெட்டவாடி, பனஹள்ளி ரேஷன் கடையிலும் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: