வியாழன், 22 மே, 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.23) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி, வெண்டிபாளையம் மற்றும் புன்செய் புளியம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (மே.23) வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வில்லரசம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு பாரதியார் நகர், வீரப்பம்பாளையம் பிரதான சாலை, ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவில்பாறை வலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னை சத்யா நகர், முதலி தோட்டம், மல்லி நகர், ஈ.பி.பி.நகர், கந்தையன் தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல் நகர், பொன்னி நகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்து மாணிக்கம் நகர், ரோஜா நகர், அருள் வேலன் நகர், எல்.வி.ஆர்.காலனி, பழையபாளையம், குமலன்குட்டை, பாரி நகர், செல்வாநகர், கீதா நகர், கணபதி நகர், முருகேசன் நகர், இந்திரா காந்தி நகர், இந்து நகர், எம்.எல்.ஏ. அலுவலகம் பின்புறம், வில்ல ரசம்பட்டி. 

வெண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சோலார், இரணியன் வீதி, பாலுசாமி நகர், சி.எஸ்.ஐ., காலனி, எஸ்.அன்ட்.எஸ். வில்லேஜ் பகுதி, வசந்தம் நகர், ஈ.பி.காலனி, கிரீன் பார்க் பகுதி, ஜல்லகிருஷ்ணன் நகர், போக்குவரத்து நகர் , சோலார் புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருங்கல்பாளையம், முத்துகவுண்டன் பாளையம், சாணார்மேடு

புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம், கள்ளிப்பாளையம், டாணாபுதூர், ஆலத்தூர், காராப்பாடி, வெங்கநாயக்கன் பாளையம் , பொன்னம்பாளையம், நல்லூர், செல்லம்பாளையம், தாசம்பாளையம், ஆலம்பாளையம், கணுவக்கரை மற்றும் ஆம்போதி.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: