ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், வரும் மே 26ம் தேதி ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது.
இந்த பயிற்சியானது மே 26ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறவுள்ளன. பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.
இப்பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், அரசினர் பொறியியல் கல்லூரி(IRTT) சாலை, வாசவி காலேஜ் அருகில், சித்தோடு, ஈரோடு-638316 என்ற முகவரியில் நடைபெறுகிறது.
விருப்பமுள்ளவர்கள் 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213, 7200650604 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: