வெள்ளி, 9 மே, 2025

சேலம் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அலுவலக மேலாளர் சுமார் 50 லட்சம் மோசடி

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அலுவலக மேலாளர் சுமார் 50 லட்சம் மோசடி 

சேலம் அரிசி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் சொர்ணபுரி பகுதியில் நான்கு சக்கர வாகனத்திற்கு வங்கியின் மூலமாக கடன் பெற்று தரும் நிதி நிறுவனத்தை 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது அலுவலகத்தில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கார்த்திக் என்பவரை அவர் பணி சிறப்பாக செய்ததன் காரணத்தினால் அனைத்து பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறார் இதை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 46 லட்சத்திற்கு மேலாக சோமசுந்தரம் என்ற நபருக்கு வங்கி பரிவர்த்தனை நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் யார் என்று விசாரித்த பொழுது அவர் அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்தியின் சித்தப்பா என்பதும் தெரிய வந்தது இவர் கடந்த 2022 ஆண்டு இறந்துவிட்டார்.  அவர் இறந்த பின்பு 2024 ஆண்டு முதல் 2025 வரை அவரது வங்கி கணக்கில் இறந்து போன சோமசுந்தரம் என்பவருக்கு வங்கி பரிவர்த்தனை செய்தது lகண்டுபிடிக்கபபட்டது. 
இந்நிலையில் கார்த்திக் இடம் விசாரித்த பொழுது அவர் பிரபுமணி இவர் ஏற்கனவே டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்தில் கடன் பெற்றிருந்ததும் அந்த கடனை அடைத்தது போல போலியான ஆவணங்களை கொடுத்து கடன் முடிந்தது போல வேறு வங்கியில் இருவரும் சேர்ந்து ரூபாய் 25 லட்சம்வாங்கிக்கொண்டு இருவரும் பிரித்துக் கொண்டனர்.
தற்போது மேற்படி தொகை சதீஷ்குமாரின் நிதி நிறுவனத்தின் பெயரில் வாங்கியதால் கடன் கொடுத்த நிதி நிறுவனம் இவரை கேட்டு வருகின்றது. இதைப் பற்றி கார்த்திக்கிடம் கேட்டால் இன்று வருகிறேன் என்றும் நாளை தருகிறேன் என்றும் அலுவலகத்திற்கும் வராமல் அவரது செல்போனையும் அனைத்து வைத்துவிட்டார். சதீஷ்குமார் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அவரது அலுவலக பணியாளர்களை வைத்து கார்த்திக் இடம் விசாரித்த பொழுது ஓரிரு மாதங்கள் வாய்தா கேட்டதாகவும் மீண்டும் கேட்டபோது அவரால் தர முடியாமல் போனதாலும் கார்த்திக் செய்த தவறுகளை பயன்படுத்தி அவரது வங்கியில் மற்ற கடன் தாரர்களுக்கு கடன் வாங்கி தருவது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிதி நிறுவனம் முற்றிலும் தொடங்கியதாகவும் தெரிகிறது. மேலும் இவரது நிதி நிறுவனம் முற்றிலும் முடங்கி விட்டதால் இவர்கள் மோசடி செய்த பணத்தினை வங்கியில் இருந்து இவரையே கட்ட சொல்லி தொந்தரவு செய்து வருகிறார்கள். இதனால் சதீஷ்குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: