திங்கள், 5 மே, 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.6) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.6) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (மே.6) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: