அப்போது, பருவாச்சி பகுதியில் வீசிய சூறைக்காற்றில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சரவணன் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதனால், அவரது உறவினர்கள் சரவணனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர். இதுகுறித்து, அறிந்ததும் நேற்று காலை அவரது வீட்டுக்கு அந்தியூர் தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய் வாளர், செந்தில்ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் சென்றனர்.
பின்னர், இறந்த சரவணனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சரவணனுக்கு குணசுந்தரி என்ற மனைவியும், சச்சின் (14) என்ற மகனும், நிஷா கோபிகா (12) என்ற மகளும் உள்ளனர்.
0 coment rios: