வெள்ளி, 9 மே, 2025

ஈரோட்டில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா கோலாகலம்..!


மாநில அம்மா பேரவை சார்பில் 
வ.உ.சி பூங்காவில் அமைந்துள்ள  அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்ட்டாடம்..

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்த நாள் வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இதைத் தொடர்ந்து ஈரோடு அஇஅதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று மாநில அம்மா பேரவை சார்பாக ஈரோடு வ.உ.சி பூங்காவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜையும், நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டியும், தற்போது இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெறவும், அவர்கள் நலமுடன் இருக்கவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 


ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு முன்னிலை வகித்தார், சிறப்பு பூஜை முடிந்ததும் அன்னதானம் நடைபெற்றது. 

அன்னதானத்தை மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ் தென்னரசு தொடங்கி வைத்தனர். 


மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, பகுதிச் செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெயராஜ், ராமசாமி, பரமசிவம், துரைராஜ், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், மாவட்ட மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசு என்கிற பழனிசாமி  உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வீரக்குமார் செய்திருந்தார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: