ஞாயிறு, 11 மே, 2025

சேலம் குகை ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் குகை ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். 

குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சித்திரை 11ஆம் தேதி ஆன இன்று பிற்பகல் 1 10 மணி அளவில் பயிற்சி அடைந்தார். இதனை ஒட்டி சேலம் குகை லைன் ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோவில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வேத விற்பனர்கள் புடை சூழ சிறப்பு யாகம் இன்று காலை 10:30 மணி அளவில் துவங்கியது. 12:30 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு குரு பெயர்ச்சி நடைபெற்ற காலகட்டமான 1 10 மணி அளவில் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றன.
இந்த சிறப்பு யாக பூஜை மற்றும் குரு பெயர்ச்சி பூஜையில், திமுக பிரமுகர் அறிவு என்கின்ற அறிவழகன் உட்பட சேலம் குகை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது ராசிகளுக்கு சிறப்பு பிரார்த்தனைகளையும் மேற்கொண்டு குருபகவானை வழிபட்டு சென்றனர். இந்த பூஜைகள் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டன. திருக்கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா சௌந்தரராஜன் மற்றும் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் குருக்கள்  சந்திரசேகர் உள்ளிட்டோர் சிறப்பு யாக பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: