செவ்வாய், 14 ஏப்ரல், 2026

விரைவில் ஊழல்- சீர்கேடுகளை கண்டித்து, எருமாபாளைம் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..மத்திய- மாநில அரசு பொதுதுறை- ஊழியர்கள் தொழிலாளர்கள் / ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முடிவு..

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

விரைவில் ஊழல்- சீர்கேடுகளை கண்டித்து, எருமாபாளைம் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..
மத்திய- மாநில அரசு பொதுதுறை-  ஊழியர்கள் தொழிலாளர்கள் / ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முடிவு..

சேலம் எருமாபாளையம் -E1/2  கிளை அலுவலகம் முன் இருக்கும் நிலை நிலை குறித்தும் அதனை செயல்படுத்த வலியுறுத்தியும், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி கூறுகையில், படு  கேவலமாக கழிவு நீர் போக வழி இல்லாமல் கிளை அலுவலகம் டிப்போ முன் இருக்கும் அவல்நிலை. சேலம் மண்டல கோட்ட அதிகாரிகள்  இதை கண்டுகொள்வதில்லையா ஏன் ? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பொது  மக்கள் பல ஆண்டுகளாக இதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
இத்தனை  ஆண்டுகள் பராமரிப்புக்கு ஒதுக்கும் நிதி எங்கே போனது.
ஊழல் நடப்பதை உறுதி செய்கிறது என்று தெரிவித்துள்ள சரஸ்ராம் ரவி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு பெண்  ஊழியர் தடுமாறுவதை கண்ட கொள்ளாத கிளை மேலாளர்கள் இருவர். E1 & E2 .
கண்ணன் என்கிற அதிகாரி அலுவலகமே சரியாக வருவதில்லை  என்ற குற்றசாட்டு. எப்படி இதை சரி செய்வார் கிளை மேலாளர் கண்ணன் என்றும்
விரைவில் இந்த  ஊழல்- சீர்கேடுகளை கண்டித்து  எருமாபாளைம் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் சரஸ்ராம் ரவி குறிப்பிட்டுள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: