சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
இந்துக் கடவுள்களை தரிசிக்க பக்தர்களை வாடிக்கையாளர்களாக பாவிக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து சேலத்தில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பக்தர்களின் இறை நம்பிக்கையை மதிக்காமல் பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களாக பாவிக்கும் தமிழக இந்து சமய அற நிலையத் துறையின் போக்கை மாற்றிட இந்துக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் போக்கை கண்டித்து பல்வேறு கோஷங்களை முழக்கினர். குறிப்பாக இந்துக் கடவுள்களை தரிசிக்க பக்தர்களை வாடிக்கையாளர்களாக பாதிப்பதா என்று தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு கேள்வி எழுப்ப பத்தாது. மேலும் தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் இந்த போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தவறும் பட்சத்தில் மாநில தலைமையின் ஒப்புதல் பெற்று சேலத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக வெளிப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்று அவர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள கோயில்களில் தரிசனக் கட்டணம் வசூலிக்க எந்தச் சட்டப்பூர்வமான ஏற்பாடும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தரிசனக் கட்டண முறை நடைமுறைக்கு வந்தது. 1987-ல் கோயில் நிலங்கள் 5.25 லட்சம் ஏக்கர் என்று அறிவித்த தமிழக அரசு, 2019-ல் கோயில் நிலங்கள் 4.78 லட்சம் ஏக்கர் மட்டுமே என்றும், அதில் 1.23 லட்சம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 22,600 கடைகளும், 33,671 மனைகளும் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 800 கோடி வருமானம் கிடைக்கும். ரூ.1000 கோடி வரை வருமானம்
வரக்கூடிய சூழல் உள்ளது. தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், பக்தர்களிடமிருந்து தரிசனக் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலை போன்ற கேரளக் கோயில்களில் தரிசனக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. கேரளாவில் இது சாத்தியமென்றால், தமிழகத்தில் ஏன் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய முடியாது? இறைவனைத் தரிசிக்கப் பணம் செலுத்த வேண்டியிருந்தால் அது கோயிலாக இருக்க முடியாது, அது ஒரு கண்காட்சியாகவே அமையும்; எனவே, பொருளாதார ரீதியான தீண்டாமையை உருவாக்கும் கோயில் தரிசனக் கட்டண முறையைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.



0 coment rios: