திங்கள், 28 ஏப்ரல், 2025

ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

சென்னிமலை அருகே சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டம் அம்மாபாளையம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன், இவரது மனைவி ராஜம்மாள் இவர்களது மகன் சீனிவாசன்.  இவர்கள் அனைவரும் நெசவு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே தனியார் நபர் பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஸ்பின்னிங் மில்லை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் செயல்பட துவங்கியது.

இங்கிருந்து வெளியேறும் பஞ்சு கழிவுகளால்,அருகில் வசிக்கும் இந்த குடும்பத்தாருக்கு மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை போன்றவர்கள் ஏற்பட்டதால் இந்த ஆலையை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு, இந்த ஸ்பின்னி மில் தொடர்பாக ஆய்வு நடத்தவேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர். 

பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்பின்னிங் மில்லில் ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று பாதிப்பு உள்ளது என்று தகவலை மாவட்ட நிர்வாகத்தில் வழங்கினர். 

இதனையெடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி அன்று ஸ்பின்னிங மில்லை மூட வேண்டும் என உத்தரவிட்டார்.  

இதனை பொருட்படுத்தாத ஸ்பின்னிங் மில் ஆலை உரிமையாளர் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் இரவு பகல் பார்க்காமல் 24 மணி நேரம் ஆலையை செயல்படுத்தி வருகிறார். 

இதனால் மீண்டும் தங்களுக்கு உடல் உபாதை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரான ராமநாதன்அவரது மனைவி ராஜமாள், மகன் சீனிவாசன் ஆகியோர் விஷம் அருந்தி தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்வதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில், அவர்கள் தடுக்கப்பட்டு முறைப்படி ஆட்சியரிடம், இது சம்பந்தமாக தெரிவித்து, அந்த ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் காமராசர் பேச்சுவார்த்தை நடத்தியதால், ராமநாதன் குடும்பத்தினர் திரும்பச் சென்றனர், இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.