தை திருநாளில் வீடுகளின், வெளியிலோ வண்ண வண்ண அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கழுத்தில் இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு பொங்கல் வைத்து சுவாமிக்கு பொங்கலை படையலிட்டு ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பொங்கல் விழாவையும் விமர்சையாக நடைபெற்று வருகிறது ...
த்தனை பண்டிகைகள் வந்தாலும் மிகவும் உற்சாகமாக, ஆரவாரமாக தமிழர்கள் கொண்டாடுவது பொங்கல் பண்டிகை, பாரம்பரிய மிக்க இந்தப் பொங்கல் பண்டிகை தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்,
அந்த வகையில், ஈரோட்டில் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என இந்த நான்கு நாட்கள் பண்டிகையை மிகவும் உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்..
அதன்படி, இன்று உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பாகுபாடு இன்றி கருணைக் காட்டும் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமான இந்த சூரிய பொங்கலை நாம் கொண்டாடி வருகிறோம், சூரியன் உதயமாகின்ற நேரத்தில் சரியாக இந்த பொங்கலை வைக்க வேண்டும், அதுதான் சூரிய பொங்கல், சூரியன் உதயமாகுவதற்கு முன் பொங்கல் வைப்பது கூடுதல் சிறப்பு என்கின்றனர், தற்போது பொங்கல் விழாவை கொண்டாடி வரும் ஈரோடு மாநகர மக்கள் ...
சனி, 14 ஜனவரி, 2023
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: