திங்கள், 23 ஜனவரி, 2023

அமமுக சார்பில் டி.டி.வி தினகரன் போட்டி? அமமுக ஆலோசனை கூட்த்தில் முடிவு..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. அமமுக சார்பில் வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அமமுக சார்பில் ஈரோட்டில் தற்போது ஆலோசனை கூட்டம் நடந்தது.
அக்கட்சியின் துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த், மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், புறநகர் மாவட்ட செயலாளர் சதாசிவமூர்த்தி, மேற்கு மண்டல அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அமமுகவின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனை வேட்பாளராக நிறுத்த வேண்டும், கட்சி நிர்வாகிகள் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: