ஞாயிறு, 22 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டு இடம் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி வாக்கு சேகரிப்பு...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு இரண்டாவது நாளாக ஈரோடு வீரப்பன் சத்திரம் காவிரி ரோடு சின்ன மாரியம்மன் கோவில் அருகிலிருந்து இருந்து தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், திமுக நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க காங்கிரஸிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸுக்கு வெற்றி கனியை பறித்து தரும் வகையில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பல்வேறு களப்பணியாற்றி வருகின்றனர், திமுக தொண்டர்கள், அதன் ஒரு முக்கிய அங்கமாக, இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் இரண்டாவது நாளாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வாக்கு சேகரிக்கும் இந்த பணியானது ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதி காவேரி சாலையின் அருள்மிகு சின்ன மாரியம்மன் கோவில் அருகிலிருந்து துவங்கி, இந்த பகுதி முழுவதும் நடைபெற உள்ளது. இந்த வாக்கு சேகரிக்கும் பணியால் திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித உற்சாகமும் காணப்படுகிறது... ஈரோடு தேர்தல் களத்தில் தாரை தப்படை முழங்க அனல் காற்று வீச தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: