திங்கள், 13 மார்ச், 2023

ஈரோட்டில் வடமாநில தொழிலாளியின் காதில் இருசக்கர சாவியால் குத்தியும், காலில் கல்லை தூக்கி போட்டு தாக்கி செல்போன் - பணத்தை பறித்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீர்த்தராஜின் மகன் சைலேந்தர் (28) என்பவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் ஈரோடு சத்திரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அப்போது 7 பேர் அங்கு வந்தார்கள், அவர்கள் சைலேந்தரிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை, இதனால் அவர்கள் சைலேந்தரின் காதில் இருசக்கர சாவியால் குத்தியும், காலில் கல்லை தூக்கி போட்டும் தாக்கினார்கள். 


அதன்பிறகு அவரிடம் இருந்து ஒரு செல்போன், 2 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.620-ஐ பறித்து கொண்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதில் காயம் அடைந்த சைலேந்தர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள், விசாரணையில் சைலேந்தரை தாக்கியது, ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த மதன்குமார் ( 26), காரைவாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த சபரி (28), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (31), அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27), சக்தி வேல் (26), நஷீர் (23), சாகுல் ஹமீத் ( 23) ஆகியோர் என்பது தெரியவந்தது, இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: