ஈரோடு ரயில் - பேருந்து நிலையத்திற்கும், மணிக்கூண்டு உள்ளிட்ட மூன்று பகுதிகளில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யபட்டுள்ளார்,
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் ஈரோட்டில் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் குண்டு வெடிக்கும் என்றும் கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து சென்னை போலீசார், ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார் படுத்தினர். இதையடுத்து, போலீசை ஈரோடு பேருந்து நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர், இதேபோல், ஈரோடு ரயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஒவ்வொரு நடைமேடை, ரயிலிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய போன் நம்பர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை திருப்பூர் மாவட்டத்தில் வைத்து ஈரோடு போலீசார் கைது செய்தனர்.இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து 2 முறைக்கு மேல் சிறைக்கு சென்றவர் என்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்ததையடுத்து போலீசார் நிம்மதி அடைந்தனர்.
0 coment rios: