ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு இந்திரா நகர் பகுதி வண்ண மயமாக காட்சியளித்தது. ஈரோடு மாநகரின் மையப்பகுதியான கருங்கல்பாளையம், திருநகர் காலனி, இந்திரா நகர், லட்சுமி நாராயணன் நகர், மோசிகீரனார் வீதி, கோட்டையார் வீதி, ஆர்.கே.வி நகர், எஸ்.எஸ் லே அவுட், உள்ளிட்ட வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஆண்டுதோறும், ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல இந்த ஆண்டும் அங்குள்ள வட இந்தியர்கள், தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து வர்ணங்கள் பூசியும், இனிப்புகள் வழங்கியும், கோலாகலமாக ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஹோலி கொண்டாட்டம் களை கட்டியது. ஒரு சில வண்ணபொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது என பல வகையான வினோத கொண்டாட்டங்களும் அரங்கேறின.
0 coment rios: