புதன், 8 மார்ச், 2023

ஐநா அதிரடி! கைலாசாவின் கோரிக்கை நிராகரிப்பு!

கைலாசா பிரதிநிதிகள் பேசிய பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐநா சபை அதிரடியாக கருத்தை வெளியிட்டு இருக்கிறது. திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து கர்நாடக மாநிலத்தில் பிடதியில் ஆசிரமம் அமைத்து புகழ்பெற்ற நித்தியானந்தா தற்போது வெளிநாட்டில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வருகிறார். இந்த நாட்டுக்கு உலக அங்கீகாரம் தேடி வருகின்றார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19-வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கைலாசா நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக விஜயபிரியா நித்தியானந்தா பங்கேற்றார். அவர் அந்த கூட்டத்தில் பேசும் போது, நித்தியானந்தா தாய் நாட்டால் வேட்டையாடப்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் தனது அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும், கருத்து திரிக்கப்பட்டு உள்ளது. இந்து எதிர்ப்பு பிரிவுகளால் சிதைக்கப்படுகிறது என்று விஜயபிரியா நித்தியானந்தா கூறி இருந்தார். நித்தியானந்தா தனது தாய்நாட்டில் சில இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என்று தான் நான் கூறினேன் என தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா கைலாசா, இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது. இந்தியாவை அதன் குரு பீடமாக மதிக்கிறது. எங்கள் கவலை எல்லாம் இந்து எதிர்ப்பு ஒரு விஷயத்தை நோக்கி மட்டுமே வழிநடத்தப்படுகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: