ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாயமான, திருட்டுப் போன செல்போன் குறித்து புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மாயமான, திருட்டுப் போன செல்போன்களை மீட்டு வருகின்றனர்.
இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் ரூ 14 லட்சத்து 12 ஆயிரத்து 385 மதிப்புள்ள 85 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் 85 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் ரூ. 76 லட்சத்து 72 ஆயிரத்து 796 மதிப்புள்ள 507 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதே போல் கடந்த ஆண்டில் ரூ. 75 லட்சத்து 62 ஆயிரத்து 406 மதிப்புள்ள 528 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்கடைம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
0 coment rios: