ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கொங்காடை என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. வாகனத்தை பர்கூரை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி சென்றார். அப்போது, மணியாச்சி பள்ளம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் குமார் லேசான காயம் அடைந்தார். வாகனத்தின் முன் பகுதி நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் டிரை வரை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: