5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், பா.ஜனதா கட்சி 3 மாநிலங்களில் வெற்றி பெற்றதை, ஈரோட்டில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் பல கட்டங்களாக இத்தேர்தல்களில் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் (தெலுங்கானா தவிர) ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில், ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ரவுண்டானா, விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில், பா.ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, மாவட்டச் செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: