ஞாயிறு, 3 டிசம்பர், 2023

ஈரோடு மாவட்டத்தில் 41,111 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

ஈரோடு மாவட்டம், திண்டல், செங்கோடம்பாளையம், யு.ஆர்.சி.மெட்ரிகுலேசன் பள்ளியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:- உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அனுசரிக்கும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 பள்ளிகளில் பயிலும் 252 குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கான பரிசுகள் இன்று வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுநாள் வரை 41,111 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 21,841 நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-2023ம் நிதியாண்டில் 8203 பயனாளிகளுக்கு ரூ.19.15 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 2021-2022ம் நிதியாண்டில் ரூ.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட இவ்வாண்டில் அரசு 6 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, உரிமைகள் திட்டத்தின் ஒரு அங்கமாக தமிழகம் முழுவதும் நவம்பர் 29 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு-2023, 14 வட்டாரங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மொத்தமாக 315 ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி தங்கள் இல்லம் தேடி வரும்பொழுது மாற்றுத்திறனாளிகள் உரிய விவரங்களை கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கி ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு மேற்கொள்ள தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறும், மற்றும் அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நல்ல முறையில் பெற்று பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் என 10 பள்ளிகளைச் சேர்ந்த பயிலும் 252 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ், பரிசுக்கோப்பை ஆகியவற்றை வழங்கினார். மேலும், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான ஓட்டப் பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், வட்டத் தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

முன்னதாக, ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, யு.ஆர்.சி. கல்வி நிறுவன தலைவர் கனகசபாபதி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: