சனி, 9 டிசம்பர், 2023

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் சாலையை கடந்து சென்ற புலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து தொடங்கும் திம்பம் மலைப்பாதை, தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாகும். திம்பம் மலைப் பாதையின் இரண்டு புறமும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது.

இங்குள்ள வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக மைசூர் தேசியநெடுஞ்சாலையை கடந்து செல்லும். அப்போது விலங்குகள் சில நேரங்களில் சாலையோரமாக உலா வருவது வழக்கம்.

இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் வாகனம் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென மின்னலை போல் சாலையை புலி கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இந்த காட்சியை வாகனத்தில் சென்ற வேறொருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: