சனி, 16 டிசம்பர், 2023

ஈரோட்டில் துவங்கிய உலக தமிழ் ஜோதிடர் மாநாடு

உலக தமிழ் ஜோதிடர்கள் மகாஜன சபை சார்பில் 12வது ஜோதிட மாநாடு ஈரோடு மல்லிகை அரங்கில் சனிக்கிழமை (இன்று) தொடங்கியது. இந்த மாநாட்டை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி தொடங்கி வைத்து பேசினார். இதில் அய்யம்பாளையம் அருள் வேல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஈரோடு கோபு முன்னிலை வகித்தார்.

மாநாட்டில், ஜோதிடர்கள் மறையேந்தி, சென்னை சண்முகவேல், ரிஷி கேசவா, மனோ, விருதுநகர் சச்சிதானந்த பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டு ஜோதிடம் பற்றி விளக்கிப் பேசினர். இந்த மாநாட்டில் ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஜோதிடர்கள் கலந்து கொண்டனர். நாளையும் இந்த மாநாடு 2வது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இதில் பிரபல ஜோதிடர் ஷெல்வி கலந்து கொள்கிறார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: