சீருடைகள் மூன்று செட் வழங்க வேண்டும், சுகாதார பணியை தனியாரிடம் கொடுக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதிக்குள் உள்ள பள்ளிகளில் தூய்மை பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தொழிலாளர்கள் அனை வருக்கும் அனைத்து பணப் பலன்களையும் உடனுக்குடன் வழங்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட தற்காலிக தூய்மை பணியாளர்கள், குப்பை லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் போராட்டத்தில் ஈடுபட உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கினர். இக்கோரிக்கை தொடர்பாக வருகிற 18ம் தேதி (திங்கள்) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்குவது என தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
0 coment rios: