செவ்வாய், 19 டிசம்பர், 2023

ஈரோட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைப்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் அறிவுறுத்தலின் படி, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 9 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1,000 போர்வைகள், 630 தண்ணீர் பாட்டில்கள், 4 ஆயிரம் எண்ணெய் பாக்கெட்டுகள் உள்பட ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 315 மதிப்பிலான பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனம் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) 21,790 பிஸ்கட் பாக்கெட்கள், 6,261 குடிநீர் பாட்டில்கள், 560 கிலோ பருப்பு வகைகள், 675 கிலோ சர்க்கரை, 250 கிலோ உப்பு, 250 டீ தூள் பாக்கெட்கள், 5347 கிலோ அரிசி, 2250 லிட்டர் எண்ணெய், 260 கிலோ கோதுமை மாவு, 4000 பிரட் பாக்கெட்கள், 250 சோப்புகள், 22,500 போர்வைகள் மற்றும் துணி வகைகள் என 64,403 எண்ணிக்கையில் ரூ.7 லட்சத்து 92 ஆயிரத்து 547 மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: